தலமை ஆசிரியரிடமிருந்து

சௌத்தென்டின் முதற் தமிழ்ப் பாடசாலையான சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடத்திற்கு உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்பதில் பேருவகையடைகின்றேன். மாணவர்களுக்கு ஓர் சிறந்த கல்விச் சூழலை அமைத்துக் கொடுப்பதுடன் எமது சிறார்களை ஒரு தமிழால் ஒருங்கிணைந்த சமூகமா உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கமாக அமைகின்றது. நாம் நமது தமிழ்ப்பாடசாலையில் பெற்றோர்கள்,பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களிற்கிடையிலான உறவையும் கல்வியையும் மேம்படுத்தும் நோக்குடன் உங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தை பற்றி சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுடன் உரையாடும் படி ஊக்குவிப்பதுடன் ஆசிரியர்கள் அதற்காக பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் வாரம் தோறும் தவறாது சரியான நேரத்திற்கு பாடசாலைக்கு சமுகமளிப்பதை உறுதி செய்வதுடன் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் பங்கெடுத்து உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்து உங்கள் தமிழ்ப் பாடசாலையை நல்வழியில் இட்டுச் செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழ் பாடசாலை ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை பல துறைகளிலும் மறைமுகமாகவோ நேரடியாகவோ எல்லா உதவிகளயும் வழங்கிக்கொண்டிருக்கும் நலன் விரும்பிகளுக்கும் மற்றும் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு வாரம் தவறாமல் கூட்டிக்கொண்டுவரும் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவிப்பதில் உவகை அடைகிறேன்.
நன்றி

லோகேந்திரன் தயாபரன் BEng (Hons)
தலைமை ஆசிரியர்
செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடம்
+44 7535 692693